திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி இல்லத்தில் இருந்து ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி இல்லத்தில் இருந்து ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. #Karunanidhi #RIPKarunanidhi
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி இல்லத்தில் இருந்து ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர்அஞ்சலி செலுத்தினர். மேலும் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனியில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் அங்கு உறவினர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சிஐடி காலனியிலிருந்து ராஜாஜி அரங்கத்திற்கு கருணாநிதியின் பூத உடல் கொண்டு செல்லப்படுகிறது. கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com