3-வது வார முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் பயணிகள் வரத்தும், விமான சேவையும் குறைந்தது

3-வது வார முழு ஊரடங்கு காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று பயணிகள் வரத்தும், விமான சேவையும் குறைந்ததால் விமான நிலையம் வெறிச்சோடியது.
3-வது வார முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் பயணிகள் வரத்தும், விமான சேவையும் குறைந்தது
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கொரோனா முதல் மற்றும் 2-வது அலைக்கு பிறகு கடந்த ஒரு மாதமாக உள்நாட்டு முனையத்தில் ஒரு நாளுக்கு 270 புறப்பாடு மற்றும் வருகை விமானங்கள் இயக்கப்பட்டு சுமா 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பயணம் செய்து வந்தனர்.

ஆனால் கடந்த சில தினங்களாக கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருவதால் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பிற நகரங்களுக்கு 206 விமான சேவைகள் இயக்கப்பட்டு, அதில் 20 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.

விமான சேவை குறைந்தது

இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக நேற்று 3-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பயணிகள் வரத்து குறைந்ததால் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, மதுரை, தூத்துக்குடி, கோவை, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு 81 விமானங்கள் இயக்கப்பட்டது. அதில் 6,364 பேர் பயணம் செய்தனர்.

அதேபோல் பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு 81 விமானங்கள் இயக்கப்பட்டு, அதில் 6,520 பேர் பயணம் செய்தனர். மொத்தம் 162 விமானங்களில் 12,884 பேர் பயணம் செய்தனர்.

ஊரடங்கு காரணமாக பயணிகள் எண்ணிக்கையும், விமான சேவையும் குறைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையமே பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com