மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

செங்குளம் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
Published on

தட்டார்மடம்:

செங்குளம் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில், ரப்பர், சிலேடு, குச்சி, ஸ்கெட்ச், லேபிள், அட்டை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை எலிசபெத் ராணி தலைமை தாங்கினார். சிகரம் இயக்குனர் முருகன் முன்னிலை வகித்தார். டி.வி.எஸ். இசக்கிமுத்து வரவேற்ர். முன்னாள் வார்டு கவுன்சிலர் சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்வி உபகரணங்களை வழங்கினார். உதவி ஆசிரியர் பெர்சி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் டி.வி.எஸ்.சுவேதா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொழில் அதிபர் பார்த்திபன், சுதாகர் ஆகியோர் ஆகியோர் நன்கொடையாக இந்த கல்வி உபகரணங்களை அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com