கோவில்பட்டியில் குடோனில் தீ விபத்து: பழைய பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம்

கோவில்பட்டி-சாத்தூர் சாலையில், வேலாயுதபுரம் அய்யனார் கோவில் அருகே உள்ள குடானில் ஏற்பட்ட தீ விபத்தில் பழைய பேப்பர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய இரும்புச் சாமான்கள் எரிந்து சேதமானது.
கோவில்பட்டியில் குடோனில் தீ விபத்து: பழைய பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம்
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செக்கடி 3-வது தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 38). இவர் கோவில்பட்டி-சாத்தூர் சாலையில், வேலாயுதபுரம் அய்யனார் கோவில் அருகே எடைமேடை அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த அலுவலகத்தின் அருகிலேயே பழைய பேப்பர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பழைய இரும்புச் சாமான்களைச் சேமித்து வைப்பதற்கான கிடங்கு ஒன்றையும் அவர் அமைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை இந்தக் கிடங்கில் திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்கள் என்பதால், தீ மிக வேகமாகப் பரவி கிடங்கு முழுவதும் சூழ்ந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த தீயணைப்புப் படையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி முற்றிலும் நாசமாயின. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்தத் தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துக் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com