அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா

திருவெண்ணெய்நல்லூர் அருகே அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா
Published on

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே சேமங்கலத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மயானக் கொள்ளை விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் பலர் அக்னிசட்டி ஏந்தி கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயானக்கொள்ளை விழா

இதையடுத்து அங்காளபரமேஸ்வரி அம்மன் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக அதே பகுதியில் உள்ள மயானத்துக்கு சென்றார். அப்போது பக்தர்கள் பலர் சாமி வேடம் அணிந்து சென்றனர். அதனை தொடர்ந்து அங்கு சாமிக்கு சிறப்பு படையல் போட்டு மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இந்த விழா தட்சிணாமூர்த்தி தலைமையிலும், பசுபதி முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com