மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை குறைக்கப்பட்டுள்ளதா? - அரசு விளக்கம்

மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை ரூ.1,000 குறைக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது.
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை குறைக்கப்பட்டுள்ளதா? - அரசு விளக்கம்
Published on

சென்னை,

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை குறைக்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தவறான தகவல் பரவி வருவதாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பரவும் செய்தி!

ஏற்கனவே ரூ.8,000-ஆக உள்ள மீன்பிடி தடைக்கால நிவாரணம், ரூ.7,000-ஆக தமிழ்நாடு அரசு குறைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.

உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான தகவல்.

மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை (Ban Period Assistance) ரூ.8,000 தொடர்ந்து தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

2026 - 2027 பட்ஜெட்டில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை (Lean Period Fishing Assistance) ரூ.6,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவலைப் பரப்பாதீர்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com