கனமழை எச்சரிக்கை: மேட்டுப்பாளையம்-உதகை மலை ரெயில் சேவை ரத்து

கனமழைக்கான எச்சரிக்கை காரணமாக மலை ரெயில் சேவை ரத்துசெய்யப்படுகிறது.
கனமழை எச்சரிக்கை: மேட்டுப்பாளையம்-உதகை மலை ரெயில் சேவை ரத்து
Published on

ஊட்டி,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், மதியம் 12 மணிக்கு உதகை சென்றடைகின்றது. யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து, மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரெயில் சேவை அடுத்த 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com