சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு
Published on

சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,34,436 ஆக உள்ளது. இதில் 13,472 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,487 பேர்

அண்ணா நகர் - 1,572 பேர்

தேனாம்பேட்டை - 998 பேர்

தண்டையார்பேட்டை - 825 பேர்

ராயபுரம் - 953 பேர்

அடையாறு- 1,312 பேர்

திரு.வி.க. நகர்- 1,007 பேர்

வளசரவாக்கம்- 997 பேர்

அம்பத்தூர்- 1,099 பேர்

திருவொற்றியூர்- 299 பேர்

மாதவரம்- 534 பேர்

ஆலந்தூர்- 829 பேர்

பெருங்குடி- 580 பேர்

சோழிங்கநல்லூர்- 564 பேர்

மணலியில் 156 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com