சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு: கண்காட்சி அரங்குகள் அமைக்க 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்


சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு: கண்காட்சி அரங்குகள் அமைக்க 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்
x

சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29, 30 ஆகிய தினங்களில் கோயம்புத்தூரில் உள்ள கொடீசியா வளாகத்தில் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் ”International Textile Summit-360” என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29, 30 ஆகிய தினங்களில் கோயம்புத்தூரில் உள்ள கொடீசியா வளாகத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டிற்குள் USD 1 Trillion பொருளாதார மாநிலமாக மாற்றும் முதல்-அமைச்சரின் தொலைநோக்கு இலக்கை அடைய ஜவுளி தொழில் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கருத்தரங்குகள் (Conference), கண்காட்சி (Exhibition), வாங்குபவர் மற்றும் விற்பவர் சந்திப்பு (Reverse Buyer Seller Meets) மற்றும் அழகுநயப்பு காட்சி (Fashion Show) ஆகியவை இடம்பெற உள்ளன. மேலும் சுமார் 100 காட்சியரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது.

இந்த கண்காட்சியில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் 13.1.2026-க்குள் மதுரை மண்டல துணை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் ddtextilesmdu@gmail.com. மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம், வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் அதிகரித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே அனைத்து ஜவுளித் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஜவுளித் தொழில் சங்கங்கள் இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: மண்டல துணிநூல் துணை இயக்குநர் அலுவலகம், எண்.34 விஸ்வநாதபுரம் மொயின் ரோடு, விஸ்வநாதபுரம், மதுரை-14, தொலைபேசி எண்கள்: 8220017071/8220656182. மேலும் மேற்சொன்ன கண்காட்சியில் Spinning, Fabric, Garments, Home Textiles, Integrated Manufacturers, Brands from Tamilnadu, Technical Textiles, Sustainablity and Recycling, Raw Material/ Recycled Textile/ Man Made Fibre ஆகிய காட்சியரங்குகள் பங்கு கொள்ள இருப்பதால் ஜவுளித் தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story