விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

சீர்காழி;

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை கண்டித்தும், தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் ஞானவள்ளி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜதுரை, மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய மாவட்ட செயலாளர் தாமு இனியவன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மண்டல செயலாளர் அறிவழகன், மண்டல துணைச்செயலாளர் பாதரக்குடி காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகி முகமது ஜுபைர் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முபாரக்அலி, சாதிக்பாஷா, புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com