இன்னல்கள் நீங்கி இன்பம் சேரட்டும் - எடப்பாடி பழனிசாமி உகாதி வாழ்த்து

தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் உகாதி திருநாள் வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள உகாதி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

பிரம்மன் உலகத்தைப் படைத்த நாளாகக் கருதப்படும் உகாதி திருநாளை உவகையுடன் கொண்டாடி மகிழும், உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

Also Read
தவறான உறவாக இருந்ததால் காங்கிரசை விவாகரத்து செய்தேன் - மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேவகவுடா பதிலடி
கோப்புப்படம்

வாழ்க்கை என்றாலே மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சரியம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேம்பு, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளிப் பானகம், உறைப்புக்கு மிளகாய், இனிப்புக்கு வெல்லம் ஆகியவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்தபின், அனைவருக்கும் பரிமாறி மகிழ்வர்.

Also Read
தமிழகத்தில் யூரியா உரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கோப்புப்படம்

தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், தங்கள் மொழிகளைக் கடந்து சகோதர-சகோதரிகளாக, தமிழர்களின் இன்ப துன்பங்களிலும் பங்கேற்று ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர்.

உகாதி திருநாளில், அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும் எனவும், இன்னல்கள் நீங்கி இன்பம் சேர வேண்டும் எனவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உகாதி திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read
ஜவுளி ஏற்றுமதி: குஜராத்தையும், மராட்டியத்தையும் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் - மு.க.ஸ்டாலின்
கோப்புப்படம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com