ஆறுமுகநேரி அருகே காட்டுப்பகுதியில் ஆண் பிணம்

ஆறுமுகநேரி அருகே காட்டுப்பகுதியில் ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? இறந்தது எப்படி? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆறுமுகநேரி அருகே காட்டுப்பகுதியில் ஆண் பிணம்
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி- குரும்பூர் செல்லும் சாலை ஓரத்திலுள்ள காட்டுப்பகுதியில் நேற்று பகலில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த இடத்திற்கு ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகுமார், தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் சென்று, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை. 50 வயது மதிக்கத்தக்க அவரது உடல் அருகில் பீடி, தீப்பட்டி மற்றும் ஒரு பூச்சி மருந்து பாட்டிலும் கிடந்ததுள்ளது. அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சாவுக்கு வேறு எதுவும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com