மூதாட்டி தற்கொலை

கணவர் இறந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
மூதாட்டி தற்கொலை
Published on

வடமதுரை அருகே உள்ள ரெட்டியபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 71). இவர், தனது மகன் சரவணக்குமாருடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நல்லம்மாளின் கணவர் முத்து உயிரிழந்தார். இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் சாணி பொடியை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நல்லம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com