ஆன்லைன் கந்துவட்டி கைது: போலீசாருக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு

ஆன்லைன் கந்துவட்டி கும்பலை கைது செய்துள்ள சென்னை காவல்துறைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் கந்துவட்டி கைது: போலீசாருக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் மட்டும் 5-க்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்த ஆன்லைன் செயலி கந்து வட்டி நிறுவனங்களை நடத்திய சீனர்கள் இருவர் உள்ளிட்ட 4 பேரை சென்னை காவல்துறை கைது செய்திருக்கிறது. சரியான நேரத்தில், சரியான திசையில் விசாரணை மேற்கொண்டு ஆன்லைன் கந்துவட்டி கும்பலை கைது செய்துள்ள சென்னை காவல்துறைக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தனிநபர் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கே ஏராளமான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ள நிலையில், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், எந்தவித அனுமதியும், உரிமமும் பெறாமல் சீன நிறுவனங்களால் ரூ.300 கோடிக்கும் கூடுதலான தொகையை வங்கி கணக்கில் செலுத்தி வட்டிக்கு விட்டு வாங்க எப்படி முடிகிறது?. 267 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில் அவற்றை விட மோசமான கந்துவட்டி செயலிகளை அனுமதிப்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, டிஜிட்டல் கந்துவட்டி நிறுவனங்களின் பின்னணி, நோக்கம், அவற்றுக்கு துணையாக இருப்பவர்கள் குறித்து விரிவான விசாரணைக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com