

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:-
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு அளித்திட அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அரசால் தொடர் பரிசீலனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மாநில திட்ட இயக்குனரின் கருத்துருவை ஏற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பணிபுரியும் 11,773 பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2026 ஜனவரி 1-ந்தேதி முதல் தொகுப்பூதியத்தை ரூ.12,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தியும், மே மாதத்திற்கு மட்டும் ரூ.10,000 சிறப்பு உதவித் தொகையாக வழங்கப்படும்.
இதற்காக நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் 3 மாதங்களுக்கு ரூ.8 கோடியே 82 லட்சத்து 97 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.