மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

தூத்துக்குடி மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு
Published on

தூத்துக்குடி மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தடகள போட்டி

தூத்துக்குடி மாவட்ட தடகளச் சங்கம், தூத்துக்குடி வர்த்தக தொழில் சங்கம் இணைந்து மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டியை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடத்தியது. போட்டிகள் 14 வயதுக்கு உட்பட்டவர்கள், 16 வயதுக்கு உட்பட்டவர்கள், 18 வயதுக்கு உட்பட்டவர்கள், 20 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆகிய பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடத்தப்பட்டன.

பரிசளிப்பு விழா

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி தலைமை தாங்கினார். தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா ஜெனிட்டா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தடகள சங்க செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் அருள் சகாயம், தூத்துக்குடி தொழில் வர்த்தக சங்க இணைச் செயலாளர் வீ.தீரமகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள், திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com