அனுமதியின்றி கல் எடுத்து வந்த லாரி பறிமுதல்

அனுமதியின்றி கல் எடுத்து வந்த லாரி பறிமுதல்
அனுமதியின்றி கல் எடுத்து வந்த லாரி பறிமுதல்
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் பாஞ்சாலியூர் அரசு தொடக்கப்பள்ளி அருகில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற மினி டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி கல் எடுத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து பொன்னுமணி கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com