தமிழுலகம் அறிந்த மூத்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைவு: கி.வீரமணி இரங்கல்

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சாலமன் பாப்பையா மறைவு: கி.வீரமணி இரங்கல்.
Published on

சென்னை,

தமிழுலகம் அறிந்த மூத்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைவையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்ப் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு

தமிழுலகம் அறிந்த மூத்த பட்டிமன்ற நடுவரும், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (வயது 90) அவர்கள் வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக் குறைவின் காரணமாகவும் மருத்துவமனையில் இன்று (11.9.2026) மறைவுற்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com