

சென்னை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் அம்பாசமுத்திரம் தவிர மீதமுள்ள நான்கு தொகுதியிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளரான சபாநாயகர் அப்பாவு ராதாபுரம் பகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
4-வது சுற்று முடிவில் அப்பாவு 13,224 வாக்குகள் பெற்ற நிலையில் தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர் 14,950 வாக்குகள் பெற்று 1,726 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் 10,545 வாக்குகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளார்.