தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

தண்ணீரில் நெற்பயிர்கள் மூழ்கின.
தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
Published on

லால்குடி:

லால்குடியை அடுத்த மைக்கேல்பட்டி கிராமத்தின் வழியாக நகர், கீழப்பெருங்காலூர் பகுதிகளுக்கு நகர பாசன வாய்க்கால் செல்கிறது. இதில் மைக்கேல்பட்டி அருகே இந்த வாய்க்காலில் பாலம் கட்டுவதற்காக பணி நடைபெறுகிறது. இதற்காக வாய்க்காலை அடைத்து வைத்துள்ளனர். இதனால் வாய்க்காலில் வரும் தண்ணீர் அப்பகுதியில் உள்ள சுமார் 15 ஏக்கருக்கும் மேலான நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com