பௌத்தர்கள் புனித பயணம்: அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு தகவல்

நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பௌத்தர்கள் புனித பயணம்: அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு
தமிழக அரசு
Published on

சென்னை,

பௌத்தர்கள் புனித பயணம்: அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தகவல். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பௌத்தர்கள்

தமிழ்நாட்டை சார்ந்த பௌத்தர்கள், நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்பும் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ,5,000/- வரை மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2026-ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இணையதளம்

இதற்கான விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடைசி நாள் : 15.11.2026

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 15.11.2026-க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி - ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com