திருவண்ணாமலையில் ஊரடங்கால் பவுர்ணமி கிரிவலம் ரத்து; பக்தர்கள் ஏமாற்றம்

திருவண்ணாமலையில் ஊரடங்கால் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திருவண்ணாமலையில் ஊரடங்கால் பவுர்ணமி கிரிவலம் ரத்து; பக்தர்கள் ஏமாற்றம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த மாதத்தில் இருந்து கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

எனவே இந்த மாத பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 1.10 மணிக்கு தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணிக்கு நிறைவடைந்தது. மாவட்ட நிர்வாகம் கொரோனா ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்தது. அதனை தொடர்ந்து கிரிவலப்பாதையில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

மேலும் வெளியூரில் இருந்து கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் கிரிவலம் செல்ல முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com