திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை வழக்கு; 7-வது குற்றவாளி அசாம் மாநிலத்தில் கைது - தனிப்படை போலீசார் அதிரடி

ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் 7-வது குற்றவாளியை அசாம் மாநிலத்தில் வைத்து திருவண்ணாமலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை வழக்கு; 7-வது குற்றவாளி அசாம் மாநிலத்தில் கைது - தனிப்படை போலீசார் அதிரடி
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி, 4 ஏ.டி.எம். மையங்களை உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளியடித்துச் சென்றனர். இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க திருவண்ணாமலை போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 6-வதாக சிராஜுதீன் என்ற நபரை ராஜாஸ்தானில் வைத்து திருவண்ணாமலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து 7-வது நபராக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த வாகித் என்ற குற்றவாளியை அசாம் மாநிலத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com