

சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது,
இன்று, தெலுங்கு வருடப் பிறப்பு கொண்டாடுகிற சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த ‘உகாதி’ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நன்னாளில், மக்கள் அனைவரது புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும், மகிழ்வும் ஆரோக்கியமும் பெற்று வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.