மீனாட்சி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
மாணவர்கள் சிறந்த தொழில் முனைவோராக முன்னேற, நிறுவனம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என கல்லூரி நிறுவனத் தலைவர் கோகுல் உறுதியளித்தார்.
மீனாட்சி பொறியியல் கல்லூரியில், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பி.இ/பி.டெக்/பி.ஆர்க்/எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் புதுமுக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் குத்துவிளக்கேற்றுதலுடன் வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. கல்லூரி முதல்வர் முனைவர்.எஸ்.ஆனந்தக் குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி நிறுவனத் தலைவர் டாக்டர் ஜி.ரா.கோகுல், செயல் இயக்குனர் என்.ரெங்கராஜன் ஆகியோர் தலைமை உரையாற்றினர்.
சார்லஸ் காட்வின், சிறப்பு விருந்தினர் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
டாக்டர். ஜி. ரா. கோகுல் பேசும்போது, மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், ஒழுக்கம், புதுமை மற்றும் கல்லூரியின் முழுமையான வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் மாணவர்கள் சிறந்த தொழில் முனைவோராகவும், சிறப்பான குடிமக்களாகவும் வளர்வதற்காக நிறுவனம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் எனவும் உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்வி சார்ந்த ஒழுங்குமுறை மாணவர் ஆதரவு அமைப்புகள் மற்றும் பாட செயல்பாடுகள் பற்றிய அறிமுகமும் வழங்கப்பட்டது.
இந்நிகழச்சியின் சிறப்பம்சமாக பி.இ./பி.டெக்/பி.ஆர்க்/எம்.பி.ஏ./எம்.சி.ஏ பயிலும் 124 மாணவர்களுக்கு ரூ.75,55,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மீனாட்சி அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் அறங்காவலர் ஏ. என். இராதாகிருஷ்ணன் உதவித்தொகை மாணவர்களுக்கும் மற்றும் மீனாட்சி அம்மாள் உதவித்தொகை மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. மீனாட்சி அம்மாள் அறக்கட்டளையின் இந்த முயற்சி, தரமானக் கல்வியை மேம்படுத்தும் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.








