

வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் புள்ளி ராஜா (வயது 26). கூலித்தொழிலாளி. இவர், 16 வயது சிறுமியிடம் திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தரப்பில் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் புள்ளிராஜா மீது, போக்சோ சட்டத்தின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர் வாணி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.