நர்சிங் மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் தற்போது கைது செய்தனர்.
நர்சிங் மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
Published on

வந்தவாசி,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி, தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு திடீரென உடலில் மாற்றம் ஏற்பட்டதால், இவரது தாயார் கடந்த மாதம் 9-ந் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றார். அப்போது, மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதைக்கேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வந்தவாசி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அதில், கொடநல்லூர் கிராமத்தை சேர்ந்த மதியரசன் (வயது 20) என்பவர், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த மதியரசனை சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com