11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
காந்தி என்ற பெயரே இருக்கக்கூடாது என்று பாஜக அரசு நினைக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோப்புப்படம்

அதன்படி கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
இன்ஸ்டாகிராமில் பழகி அத்துமீறல்... இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது
கோப்புப்படம்

மேலும் செங்கல்பட்டு, மதுரை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
திமுகவை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோப்புப்படம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com