பாகிஸ்தான்: பஸ்சில் சென்ற 9 பயணிகளை சுட்டுக்கொன்ற கிளர்ச்சியாளர்கள்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்சில் சென்ற 9 பயணிகளை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றனர்.
பாகிஸ்தான்: பஸ்சில் சென்ற 9 பயணிகளை சுட்டுக்கொன்ற கிளர்ச்சியாளர்கள்
Published on

கராச்சி,

பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய கிளர்ச்சியாளர்கள் குழு, அதில் இருந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர் சில பயணிகள் கடத்தப்பட்டனர். அதில் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர்.

மாகாணத்தின் சோப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக உதவி ஆணையர் சோப் நவீத் ஆலம் தெரிவித்தார். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட ஒன்பது பேரும் பஞ்சாப் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆலம் கூறினார்.

பலியானவர்கள் உடல்கள் குண்டுத் துளைத்த காயங்களுடன் மலைகளில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த மக்களையும், பலுசிஸ்தானில் வெவ்வேறு நெடுஞ்சாலைகளில் செல்லும் பயணிகள் பஸ்களையும் கிளர்ச்சியாளர்கள் குறிவைப்பது இது முதல் முறை அல்ல. இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் கடந்த காலங்களில், பஞ்சாப் மக்களுக்கு எதிராக இன பலூச் கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இதுபோன்ற இலக்கு தாக்குதல்களை நடத்தி உள்ளன.

இதற்கிடையில், குவெட்டா, லோரலை மற்றும் மஸ்துங்கில் கிளர்ச்சியாளர்கள் மேலும் மூன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தினர், ஆனால் பலூசிஸ்தான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட், பாதுகாப்புப் படையினர் இந்த தாக்குதல்களை முறியடித்ததாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com