பாகிஸ்தானில் இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது: 4 பேர் மீது வழக்கு பதிவு

பாகிஸ்தானில் இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக, 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தானில் இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது: 4 பேர் மீது வழக்கு பதிவு
Published on

கராச்சி,

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் பெரும்பாலான இந்துக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு சாக்ரோ என்ற நகரில் உள்ள மாதா தேவல் பித்தானி என்ற இந்து கோவிலை ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத 4 பேர் சேதப்படுத்தினர். இதையறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 4 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மத ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் அமைதிகாக்க வேண்டும் என்று சிந்து மாகாண அரசு அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com