மாஸ்கோ: கார் குண்டு வெடிப்பில் ரஷிய ஜெனரல் பலி

இந்த சம்பவத்தில் உக்ரைன் புலனாய்வுப் பிரிவினரின் ஈடுபாடு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாஸ்கோ,
ரஷிய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மொஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெனரல் பயணித்த காரில் பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படும் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டு அவர் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ரஷிய பொது ஊழியர்களின் செயல்பாட்டு பயிற்சித் துறையின் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ் செயல்பட்டு வந்துள்ளார். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைனிய உளவுத்துறை சேவைகள் சம்பந்தமாக இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று புலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்தேகத்துள்ளனர். எதுவாயினும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து உக்ரைன் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
Related Tags :
Next Story






