சீனாவுடனான வாத்தக வழித்தடம் - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவுடனான வாத்தக வழித்தடம் தொடர்பாக, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவுடனான வாத்தக வழித்தடம் - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
Published on

வாஷிங்டன்,

சீனாவுடனான வாத்தக வழித்தடம் பாகிஸ்தானுக்கு நீண்டகால பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பலுசிஸ்தானின் குவாடர் துறைமுகம் வரை சீனா-பாகிஸ்தான் பெருளாதார வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கு அமெரிக்கா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


இந்நிலையில், வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டின் தெற்காசிய விவகாரத்துறை துணை செயலாளர் அலைஸ் வெல்ஸ் பேசியபோது, பெருளாதார வழித்தடத்தால் சீனாவுக்குதான் அதிக லாபம் என்றார். மேலும் இந்தத் திட்டத்தால் பாகிஸ்தான் பெருளாதாரம் நீண்ட கால பாதிப்பை சந்திக்கும் என்று கூறிய அவர், கோடிக்கணக்கான டாலாகள் முதலீடு செய்து வழித்தடத்தை பாகிஸ்தானில் சீனா அமைத்தாலும் கட்டுமானப் பணிகளுக்கு தனது சொந்த நிறுவனங்களையும், தொழிலாளாகளையும் மட்டுமே அனுப்பி வைப்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பாகிஸ்தானில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும்போது, அந்த நாட்டுப் பணியாளாகளை வேலைக்கு அமாத்தாமல் சீனா தங்கள் தொழிலாளாகளுக்கே அந்த வாய்ப்புகள் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com