மூதாட்டி தற்கொலை

புதுச்சோயில் தனிமையால் விரக்தி மூதாட்டி எலி பேஸ்ட் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
மூதாட்டி தற்கொலை
Published on

புதுச்சேரி

புதுச்சேரி ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 63). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்து விட்டார். அதன்பின்னர் அங்கேயே வசித்து வந்தார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது. தாயார் இறந்தபின் சரஸ்வதி தனிமையில் வாழ்ந்து வந்தார். இதனால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் எலி பேஸ்ட் (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் பெரியகடை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com