தூத்துக்குடியிலுள்ள கடைகளில் வியாழக்கிழமை அதிரடியாக சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி 2 கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சத்து 6 ஆயிரத்து 580 ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.