தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, தூத்துக்குடி மாநகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனை முருகன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு இடையூறாக, விதிகளுக்கு புறம்பாக அதிக இரைச்சல் மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்தியிருந்த பைக்குகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.