'இம்பேக்ட் பிளேயர்' விதிமுறை இருப்பதினால் நாளுக்கு நாள் போட்டி கடினமாகி வருகிறது - ரிஷப் பண்ட்

டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர் மெக்கர்க் 27 பந்தில் 84 ரன்கள் அடித்தார்.
 Image Courtesy: X (Twitter) 
Image Courtesy: X (Twitter) 
Published on

டெல்லி,

ஐ.பி.எல் தொடரில் இன்று மாலை டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய  டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஜேக் ப்ரேசர் மெக்கர்க்கின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 257 ரன்கள் குவித்தது.

டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர் மெக்கர்க் 27 பந்தில் 84 ரன்கள் அடித்தார். இதையடுத்து 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 10 ரன் வித்தியாசத்தில் டெல்லி திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய டெல்லி வீரர் ஜேக் ப்ரேசர் மெக்கர்க்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது,

நாங்கள் முதலில் பேட்டிங் செய்து 250 ரன்கள் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதினால் நாளுக்கு நாள் போட்டி கடினமாகி வருகிறது. வேகப்பந்து வீச்சிற்கு எதிராக என்னால் ஸ்டம்பிற்கு அருகில் நின்று கீப்பிங் செய்ய முடியும். ஆனால் பவுலரும் தவறான பந்துகளை வீசக்கூடாது என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

டிம் டேவிட் போன்ற அதிரடியான வீரர்கள் கிரீஸை பயன்படுத்தி இறங்கி ஆடுவார்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக அந்த திட்டம் வேலை செய்தது. ஜேக் பிரேசர் மெக்கர்க் எங்களது அணியில் வந்த முதல் நாளிலிருந்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவரது ஆட்டம் மெருகேறி வருகிறது. இந்த வெற்றியின் மூலம் நாங்கள் பிளே-ஆப் சுற்றை நோக்கி படிப்படியாக முன்னேறி வருவது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com