துலீப் டிராபி; கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம்

இந்தப் பொறுப்பு, அவரது வளர்ச்சியில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது

 துலீப் டிராபி; கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம்
Published on

புதுடெல்லி.

இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான முதல் தர போட்டியான துலீப் டிராபி 2026–27, ஆகஸ்ட் 23 முதல் பெங்களூருவில் தொடங்குகிறது. இந்தத் தொடருடன் இந்தியாவின் 2026–27 உள்நாட்டு கிரிக்கெட் சீசனும் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது.

இந்த ஆண்டும் துலீப் டிராபி மண்டல (Zonal) முறையில் நடைபெறுகிறது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் வடகிழக்கு என ஆறு மண்டல அணிகள் பட்டத்துக்காக மோதுகின்றன.

இந்தியாவின் இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, 2026–27 துலீப் டிராபி தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடிய பிறகு கிடைத்த இந்தப் பொறுப்பு, அவரது வளர்ச்சியில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com