

லண்டன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 8 ஆம் தேதி தொடங்க உள்ளது.
போட்டி துவங்க உள்ள நிலையில், இங்கிலாந்து அணியினருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் அணி நிர்வாக உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 7 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டித்தொடர் திட்டமிட்ட படி நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில், போட்டித்தொடர் திட்டமிட்டபடி நிச்சயம் நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.