பாகிஸ்தான் வீராங்கனை குல் பெரோசாவுக்கு அபராதம்

அவரது போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வீராங்கனை குல் பெரோசாவுக்கு அபராதம்
Published on

துபாய்,

பாகிஸ்தான் மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை குல் பெரோசாவுக்கு, சர்வதேச கிரிக்கெட் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக அவரது போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மகளிர் ஆசியக் கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில், நடந்தது. நடுவரின் முடிவை குல் பெரோசா எதிர்த்ததால் நடத்தை விதிமுறைகளில் 2.8வது பிரிவை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்தப் பிரிவு சர்வதேச போட்டியின் போது நடுவரின் முடிவுக்கு வார்த்தைகள் அல்லது செய்கைகள் மூலம் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பானது. இது முதல் நிலை விதிமீறலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குல் பெரோசா தனது தவறை ஒப்புக்கொண்டதுடன், போட்டி நடுவர் சுப்ரியா ராணி தாஸ் முன்மொழிந்த தண்டனையையும் ஏற்றுக்கொண்டார். இதனால் தனிப்பட்ட ஒழுங்கு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com