கெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பு

கெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்புள்ளதாக பஞ்சாப் அணி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பு
Published on

*ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பிடித்து இருக்கும் 41 வயது அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்) இதுவரை களம் இறங்கவில்லை. கடந்த வாரம் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புட் பாய்சன் பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் அவரால் விளையாட முடியாமல் போனது. தற்போது குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் கெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுவார் என்று பஞ்சாப் அணி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்திய ரக்பி அணிகளுக்கு 3 ஆண்டுகள் ஸ்பான்சர் அளிக்க ஒடிசா மாநில அரசு முன்வந்துள்ளது. இதற்காக இந்திய ரக்பி யூனியன், ஒடிசா மாநில அரசு இடையிலான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன்படி 2023-ம் ஆண்டு வரை இந்திய ரக்பி அணிகளின் பயிற்சி, ஆட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவுகளை ஒடிசா அரசு ஏற்றுக்கொள்ளும்.

* டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் 19 வயதான லக்ஷயா சென் 21-9, 21-15 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோ போபோவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்றைய ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம், சுபாங்கர் தேவ் களம் காணுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com