

சென்னை,
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் விலா பகுதியில் வலியால் அவதிப்பட்டார். காயத்தால் 3 மாத ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பிய அவர் மறுபடியும் காயத்தில் சிக்கி இருப்பதால் ரிஸ்க் எடுக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை. இதையடுத்து அணி மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து புவனேஷ்வர்குமார் நேற்று விலகினார். அவருக்கு பதிலாக மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.