ஐபிஎல் : லேசர் ஷோவில் தவறான இந்திய வரைபடம் - கொந்தளிக்கும் ரசிகர்கள்

குவாலிபையர் 1 போட்டியின் இன்னிங்ஸ் இடைவெளியில் லேசர் ஷோ நடத்தப்பட்டது.
ஐபிஎல் : லேசர் ஷோவில் தவறான இந்திய வரைபடம் - கொந்தளிக்கும் ரசிகர்கள்
Published on

தரம்சாலா,

குவாலிபையர் 1 போட்டியின் இன்னிங்ஸ் இடைவெளியில் நடத்தப்பட்ட லேசர் ஷோவில் , இந்தியாவின் வரைபடம் தவறாக காட்டப்பட்டது சர்ச்சையை எற்படுத்தி இருக்கிறது.

தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற குவாலிபையர்-1 ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 254 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது. கேப்டன் ரஜத் படிதார் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களின் அதிரடியான ஆட்டம் அந்த அணிக்கு பெரிய ஸ்கோரை பெற்றுத்தந்தது.

அரைகுறை வரைபடம்: மைதானத்தில் அதிர்ச்சி!

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் லேசர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 25 நிமிடங்கள் நீடித்த இந்த லேசர் ஷோவின் போது, இந்தியாவின் வரைபடம் லேசர் விளக்குகளால் பிரதிபலிக்கப்பட்டது.

ஆனால், அந்த வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களின் (North-East States) பெரும்பாலான பகுதிகள் விடுபட்டிருந்தன. இதை நேரலையில் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

Also Read
ஐபிஎல் - 5வது முறையாக இறுதிப்போட்டியில் ஆர்சிபி... 2வது கோப்பையை வெல்லுமா?
ஐபிஎல் : லேசர் ஷோவில் தவறான இந்திய வரைபடம் - கொந்தளிக்கும் ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்

இந்த தவறான வரைபடத்தின் காட்சிகள், அடுத்த சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வைரலாகின. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com