ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
Published on

அபுதாபி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்று நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளான முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும். தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் களம் இறங்கி விளையாட உள்ளனர். இதில் வெல்லும் அணி இரண்டாவது தகுதிச் சுற்றில் டெல்லி அணியுடன் மோதுவதற்கு தகுதிபெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com