கடைசி டி20 போட்டி; வங்காளதேசத்திற்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு..!

வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
Image Courtesy: @BLACKCAPS
Image Courtesy: @BLACKCAPS
Published on

மவுண்ட் மவுங்கானுய்,

வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. 2வது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் வங்காளதேசமும், அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் நியூசிலாந்தும் ஆட உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்துகான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com