மார்க்ரம், மார்ஷ் அதிரடி.. ஐதராபாத்துக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த லக்னோ

லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 65 ரன்கள் அடித்தார்.
மார்க்ரம், மார்ஷ் அதிரடி.. ஐதராபாத்துக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த லக்னோ
Published on

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் - மார்க்ரம் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. அதிரடியாக விளையாடிய மார்ஷ் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பண்ட் 7 ரன்களில் நடையை கட்டினார்.

சிறிது நேரத்திலேயே சிறப்பாக ஆடி வந்த மார்க்ரம் 61 ரன்களில் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆயூஷ் பதோனி 3 ரன்களில் அவுட்டானார். இறுதி கட்டத்தில் நிக்கோலஸ் பூரன் (45 ரன்கள்) அதிரடியாக விளையாடி லக்னோ வலுவான நிலையை எட்ட உதவினார். அவர் இறுதி ஓவரில் ரன் அவுட் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்துள்ளது. கடைசி பந்தில் ஆகாஷ் தீப் சிக்சர் அடித்து அணி 200 ரன்களை எட்ட உதவினார். ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக எஷான் மலிங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஐதராபாத் களமிறங்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com