மகளிர் உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இந்தூர்,
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் 7வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா , நியூசிலாந்து மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 1 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா 1 விக்கெட் இழந்து 5 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் ஜார்ஜியா ரன் எதுவும் எடுக்காமலும் (0), எமிலியா 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story






