ரிஷாப் பண்ட் அனைத்து நிலைகளிலான போட்டிகளிலும் சிறப்புடன் விளையாடுவார்; சவுரவ் கங்குலி புகழாரம்

ரிஷாப் பண்ட் அனைத்து நிலைகளிலான கிரிக்கெட் போட்டிகளிலும் வரும் ஆண்டுகளில் சிறப்புடன் விளையாடுவார் என பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.
ரிஷாப் பண்ட் அனைத்து நிலைகளிலான போட்டிகளிலும் சிறப்புடன் விளையாடுவார்; சவுரவ் கங்குலி புகழாரம்
Published on

ஆமதாபாத்,

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 205 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அஷ்வின் 3 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்நிலையில் இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. கேப்டன் கோலி ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 49 ரன்கள், புஜாரா 17 ரன்கள், ரகானே 27 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதேசமயம், ரிஷாப் பன்ட்-வாஷிங்டன் சுந்தர் ஜோடி, இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை குவித்தது. ரிஷப் பன்ட் சதம் அடித்தார். அவர் 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதுபற்றி சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எவ்வளவு சிறந்தவர் அவர்? நம்பமுடியவில்லை... நெருக்கடியான நிலையில் சிறப்புடன் ஆடினார். இது முதல்முறையல்ல. கடைசி முறையாகவும் இருக்காது... வருகிற ஆண்டுகளில் அனைத்து நிலைகளிலான ஆட்டங்களிலும் எல்லா தருணங்களிலும் சிறந்தவராக அவர் இருந்திடுவார்.

இந்த ஆக்ரோச முறையில் தொடர்ந்து விளையாடுங்கள். அதனாலேயே அவர் போட்டியை வெற்றி பெற செய்பவராகவும் மற்றும் சிறந்தவராகவும் இருக்கிறார் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com