டி20 உலகக்கோப்பை; ரோகித்துடன் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார்.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்த தொடருக்கான இந்திய அணியின் தனது ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார். இதில் அவர் ரோகித்துடன் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்த அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துளார். அணியின் ஆடும் லெவனில் ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே இருவருக்கும் இடம் அளித்துள்ளார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்த இந்தியாவின் ஆடும் லெவன்:

ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com