400 சர்வதேச போட்டிகளில் ஒன்றாக விளையாடிய ஒரே இந்திய ஜோடி: ரோகித் - கோலி படைத்த மெகா சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
400 சர்வதேச போட்டிகளில் ஒன்றாக விளையாடிய ஒரே இந்திய ஜோடி: ரோகித் - கோலி படைத்த மெகா சாதனை
Published on

லண்டன்,

சர்வதேச கிரிக்கெட்டில் 400 போட்டிகளில் ஒன்றாக விளையாடிய இந்திய ஜோடி என்ற பெருமையை ரோகித், கோலி பெற்றுள்ளனர்.

400 போட்டிகள்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் நடந்தது. இப்போட்டியில் களமிறங்கியதன் மூலம், விராட் கோலி, ரோகித் ஷர்மா இணை சர்வதேச கிரிக்கெட்டில் 400 போட்டிகளில் ஒன்றாக விளையாடிய இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 387 ரன்களை குவித்தது.

ரோகித் சதம்

388 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில், சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார். விராட் கோலி 74 ரன்கள் எடுத்தார்.

இருப்பினும் மற்ற வீரர்கள் சோபிக்காததால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 360 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. டி20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் இழந்திருப்பது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com