டி.என்.பி.எல்.: கோவைக்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சு தேர்வு

முதல் 2 கட்ட லீக் ஆட்டங்கள் கோவை மற்றும் சேலத்தில் நடைபெற்றது
image courtesy:twitter/@TNPremierLeague
image courtesy:twitter/@TNPremierLeague
Published on

நெல்லை,

9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றியை ருசித்த 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மட்டும் 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்திருக்கிறது. மற்ற அணிகள் போராடுகின்றன.

இதில் முதல் இரு கட்ட லீக் ஆட்டங்கள் கோவை மற்றும் சேலத்தில் நடைபெற்றது. போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். இந்த நிலையில் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இதில் இன்றிரவு நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி கோவை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com